இலங்கையின் வனிந்துவை வாங்கியதும் புன்னகைத்த காவ்யா: X வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்

0
115

ஐ.பி.எல் மினி ஏலம் துபாயில் தற்போது இடம்பெற்று வருகின்றது. பல சர்வதேச வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 1.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.

இந்நிலையில் ஹசரங்காவை வாங்கியதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரி காவ்யா மாறன் சிரித்துக் கொண்டிருந்த நிலையில் அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வனிந்து ஹசரங்காவை அடிப்படை விலைக்கு வாங்கியதை அடுத்து ஐ.பி.எல் ஏலத்தில் காவ்யா மாறனின் படங்கள் வைரலாகியுள்ளன. இந்த படங்களை ரசிகர்கள் X வலைதளத்தில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிர் ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக 2021 ஆம் ஆண்டில் முதன் முதலில் ஹசரங்க விளையாடினார்.

பின்னர் இருபதுக்கு இருபது போட்டிகளில் மிகவும் மதிப்பு மிக்க வீரராக அவர் உருவெடுத்தார். நடந்து முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரிலும் வனிந்து தலைமையிலான அணி வெற்றிபெற்றிருந்தது.

26 வயதான அவர் சகல துறை வீரர் என்பதுடன், தரம் வாய்ந்த லெக்-ஸ்பின் பந்துவீச்சுக்கும் பெயர் பெற்றவர் ஆவார். மத்திய வரிசையிவ் முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தும் திறமை கொண்டவர்.

இந்நிலையில் வனிந்து ஹசரங்கவின் வருகை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு தாக்குதலை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.