சென்னை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சாலையைக் கடந்த முதலையை பிடித்த வனத்துறையினர்

0
133

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பெருங்களத்தூர் பகுதியில் தென்பட்ட முதலையை வனத்துறையினர் பிடித்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த வாரம் சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளானர்.

முதலையை பிடித்த வனத்துறையினர்

இந்நிலையில் ஆலப்பாக்கம் மப்பேடு சாலையில் இந்திய விமான நிலையம் சுற்றுச்சுவர் அருகே முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. இந்த முதலை பெருங்களத்தூர் பகுதியில் காணப்பட்ட முதலையா அல்லது வேறு முதலையா என்று விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே பெருங்களத்தூர் பகுதியில் தென்பட்ட முதலை நெற்குன்றம் ஏரியில் இருந்து வந்திருக்கலாம் என கூறப்பட்டுகின்றது.