பணக்காரர்கள் மட்டுமே குறி: 21 பேர் தலையை துண்டித்த மந்திரவாதி!

0
169

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 42 வயதான சத்யம் தன்னை ஒரு மந்திரவாதியாக பணக்காரர்களிடம் அறிமுகம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

தான் நடத்தும் பூஜை மூலம் அதிர்ஷ்டம், அழகான பெண்களின் சகவாசம், கூடுதல் சொத்துக்கள் கிடைக்கும் என அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறுவார். சில மாதங்களுக்குப் பின்னர் அந்த பணக்காரர்கள் திடீரென காணாமல் போய்விடுகின்றனர்.

இதில் சிலரது உறவினர்கள் பொலிஸில் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை செய்த போது சத்யம் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

Oruvan

அதன்படி பணக்காரர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறித்த பின்னர் அவர்களை கழுத்தை துண்டாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இந்த வகையில் இதுவரை 21 பேரை சத்யம் கொன்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறும் பொலிஸார் போலி மந்திரவாதி சத்யமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.