புதிதாக நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

0
192

புதிதாக நியமிக்கப்பட்ட பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூனை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.

பிரிட்டன் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது வெளியுறவுத் துறை அமைச்சராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமிக்கப்பட்டனர். இந்நிலையிலேயே எஸ்.ஜெய்சங்கர் டேவிட் கேமரூனுடன் சந்திப்பை நடத்தியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ்பக்கத்தில் “புதிய வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டேவிட் கேமரூனுக்கு எனது வாழ்த்துகள். அவருடன் இரு நாட்டு நல்லுறவு, ஒத்துழைப்பு குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

நான்கு நாள் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் தீபாவளி கொண்டாடினார். அன்றைய தினம் அவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான உறவுகளைப் பற்றி விவாதிக்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தியா இன்று மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. பாரதத்தின் மீதான பார்வை எவ்வளவு மாறிவிட்டது என்பதை நான் தற்போது காண்கிறேன்” என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.