வீதியில் தேங்கியிருந்த நீரில் மீன் பிடித்த மீனவர் – வினோத போராட்டம்

0
195

வீதியில் மீன் பிடித்த மீனவர் ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. கொக்கட்டிச்சோலை – அம்பிளாந்துறை பகுதியின் பிரதான வீதியே இவ்வாறு அவல நிலைக்கு இலக்காகியுள்ளது.

பல வருடங்களாக அபிவிருத்தி செய்து தருவதாக கூறியும் ஒரு செயற்பர்டும் மன்னெடுக்கப்படாத நிலையில் குறித்த மீனவர் இவ்வாறு பாதையில் தேங்கியிருக்கும் நீரில் மீன்பிடித்துள்ளார்.

இவரின் செயல் யாராவது ஒருவரின் கவனத்திற்காவது சென்று இந்த பாதைக்கு ஒரு அபிவிருத்தி நிலை கிடைக்காதா என கோரியே இவர் அரசை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் குதித்துள்ளார்.