ராஷ்மிகா மந்தனா விவகாரத்தில் கொதித்தெழுந்த பாடகி சின்மயி

0
167

பாடகி சின்மயி ‘ராஷ்மிகாவின் டீப் பேக் (deepfake) காணொளி குறித்து பாடகி சின்மையி இணையத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் அவர் மனவேதனையுடன் வலைதளத்தில் பதிவிட்டதை நான் பார்த்தேன்.

தினமும் பெண்களின் உடல்கள் சுரண்டப்படும் ஒரு நாட்டில் பெண்களை குறிவைத்து துன்புறுத்தவும் மிரட்டி பணம் பறிக்கவும் அவர்கள் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் டீப் பேக்.

சிறுமிகளுக்கு டீப் பேக்கின் ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தவும் இதுபோன்ற சம்பவங்களுக்கு புகாரளிக்கவும் நாடு தழுவிய ஒரு விழிப்புணர்வு பிரசாரம் தேவைப்படுகிறது’ என்று பாடகி சின்மையி பதிவிட்டுள்ளார. இந்த பதிவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.