லவ்டுடே பாணியில் வந்த ஆபாச காணொளி; கடும் வேதனையில் ராஷ்மிகா மந்தனா!

0
164

இணையத்தில் பரவி வரும் தனது ஆபாசமான மார்பிங் காணொளியை பார்த்த நடிகை ராஷ்மிகா தொழில்நுட்பத்தை பார்த்தால் பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி மூலம் சுலபமாக மற்றொருவரின் முகத்தை வைத்துத்து புகைப்படம் அல்லது காணொளியில் மார்பிங் செய்துவிட முடியும்.

இந்த தொழிநுட்பத்தினை தவராக பயன்படுத்திய சிலர் ராஷ்மிகாவின் புகைப்படத்தினை பயன்படுத்தி ஆபாசமான காணொளியை எடிட் செய்து வைரலாக்கியுள்ளனர். இதனை பார்த்த ராஷ்மிகா டுவிட்டரில் வேதனையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் மிகவும் வேதனைப்படுகிறேன், மேலும் நான் ஆன்லைனில் பரப்பப்படும் ஆபாச வீடியோவைப்பற்றி பேச வேண்டும். இது போன்ற ஒன்று நேர்மையாக, எனக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பம் தவறாகப்பயன்படுத்தப்படுவதால் இன்று மிகவும் தீங்கு விளைவிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயமாக இருக்கிறது.

இன்று, ஒரு பெண்ணாகவும் ஒரு நடிகையாகவும் எனது பாதுகாப்புக்கு துணையாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்தால் இதை எப்படி சமாளித்து இருப்பேன் என்று என்னால் கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாது.

இதுபோன்ற மோசமான செயலால் நம்மில் பலர் பாதிக்கப்படுவதற்கு முன் இதுபோன்ற செயலை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் நடிகை ரஷ்மிகா தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.