தமிழ் மக்களை விரட்டி அடித்து சிங்கள மக்களை குடி அமர்த்துவதற்கான பணி தீவிரம்!

0
155

தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருந்தாலும் அது தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துரைத்துள்ளது.

இந்த குழுவினருக்கும் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டதாக கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஆராய்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்பை விரிவுபடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறுவர் அடங்கிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர்.