அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அஸ்வெசும வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அஸ்வெசும உதவித்தொகையைப் பெற்றவர்களும் இதுவரையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை பெறாதவர்கள் குறித்து எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பிக்கப்படவுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டம்
மேலும் அஸ்வெசும பயனாளிகளுக்கான கடந்த ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு நடவடிக்கைகள் நாளை (01.11.2023) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கியுள்ளோம். அடுத்ததாக நிதியமைச்சு, திறைசேரி மூலம் 8.5 பில்லியன் ரூபாவை 1,365,000 பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் . அதன்படி, புதன்கிழமை முதல் பயனாளிகள் அவர்களின் பலன்களைப் பெற முடியும்.” என்றார்.