ஹமாஸ் போராளிகளிடம் கனேடிய பிதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கோரிக்கை..

0
166

இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஹமாஸ் போராளிகளிடம் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் நிலைமைகள் குறித்து நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் தீவிரவாதிகள் யூத மக்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறகைளை கட்டவிழ்த்து விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்க உறுப்பினர்களை சுதந்திர போராளிகளாக கருத முடியாது எனவும் அவர்கள் தீவிரவாதிகள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காஸா பிராந்திய வலயத்திற்குள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தடைகள் ஏற்படுத்தப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

காஸா பிராந்தியத்திற்கான உணவு, மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இஸ்ரேல் முடக்கியுள்ளது.

தற்பாதுகாப்பு நோக்கில் இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்கும் அதேவேளை, சர்வதேச சட்டங்கள் உதாசீனம் செய்யப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.