இந்தியாவின் சாதனையை முறியடிக்க கிளம்பும் சீனா..!

0
384

சீனாவின் Change – 8 விண்கலம் மூலம் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கான ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக Change – 8 விண்கலத்தை 2028ம் ஆண்டு விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

நிலவு ஆராய்ச்சியில் சீனாவின் 4வது கட்ட ஆராய்ச்சி இதுவாகும்.

இந்த திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்பும் நாடுகள் ஆண்டு இறுதிக்குள் தெடர்புக்கொள்ள முடியும் என சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சந்திரயான் – 3

அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் எந்த நாட்டுடன் இணைந்து செயல்படுவது என்பது பற்றி அறிவிக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம், இந்தியா தனது சந்திரயான் – 3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியது. தென்துருவத்தில் சென்ற முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா நிறைவேற்றியிருந்தது.

அதே வாரத்தில், ரஷ்யாவின் முதல் சந்திர பயணம் லூனா 25 விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் மோதி தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.