ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற வேட்டையன்

0
183

நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் ஆசி பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் ராகவா லாரன்ஸ் “என் தலைவர் மற்றும் குரு ரஜினியை சந்தித்து ‘ஜெயிலர்’ வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

“சந்திரமுகி- 2 திரைப்படம் 28ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் அவரிடம் ஆசி பெற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும், ‘சந்திரமுகி -2’ திரைப்படம் வெற்றியடைய வேண்டி படக்குழுவினருடன் நேற்று ராகவா லாரன்ஸ் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ பேடம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.