தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்துக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்த கன்னட அமைப்புகள்!

0
200

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று ஒருநாள் பந்த் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் பூதாகரமாகி உள்ளது.

கர்நாடகாவில் குடிக்க தண்ணீர் இல்லை எனக்கூறி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க அங்குள்ள விவசாய, கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் தீர்ப்பை மீற முடியாமல் கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது.

இதனை கண்டித்து கேஆர்எஸ் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பந்த் நடந்தது. இதையடுத்து இன்று பெங்களூரில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக ஜல ரக்சனா சமீதி (கர்நாடகா நீர் பாதுகாப்பு குழு) சார்பில் இந்த பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைக்கும் மோசமான செயலை செய்துள்ளனர். இதற்கு தமிழகத்தில் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.