அவுஸ்திரேலியாவில் மாயமான இலங்கை இளைஞர்!

0
200

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. காணாமல் போனவர் 18 வயதுடைய திஷாந்தன் என கூறப்படுகின்றது.

குறித்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை (4) முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் வைத்தே காணாமல் போன நிலையில் அவர் கடைசியாக காரில் பயணித்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இளைஞர் மாயமானது குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.