அமெரிக்காவின் ஆசிரியைக்கு 600 ஆண்டு சிறை தண்டனை!

0
177

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மன்ரோ கவுண்டியில் 74 வயதான ஆசிரியை (முன்னாள்) ஒருவர் தனது மாணவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

74 வயதான அன்னே என். நெல்சன்-கோச் தனது 14 வயது மாணவனை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு்ள்ளார்.

குற்றவாளியான பெண்ணுக்கு 600 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணையில் குற்றம் உறுதி 

ஆசிரியை ஒருவரின் இந்த தகாத செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிக்கு பல நூறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

அக்டோபர் 27 அன்று குற்றவாளிக்கான தண்டனை அறிவிக்கப்படலாம் என்று மன்ரோ கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் கெவின் க்ரோனிங்கர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.