ஆப்கானை கதிகலங்க வைத்த வீரர்; 18 பவுண்டரிகளுடன் அபார சதம் விளாசல்

0
255

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் வங்கதேச வீரர் நஜ்முல் ஷாண்டோ சதம் விளாசினார்.

ஒரே டெஸ்ட் கொண்ட தொடர்

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கான் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில், தொடக்க வீரர் சாஹிர் ஹஸன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மஹ்முதுல் ஹசன் ஜோய் – நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஜோடி நங்கூரம் போல் நின்று ஆடி வருகிறது.

மூன்றாவது சதம்

நஜ்முல் ஷாண்டோ அதிரடியாக பவுண்டரிகளை விரட்டி, டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதத்தினை பதிவு செய்தார். அவர் 118 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார்.

மஹ்முதுல் ஹசன் ஜோய்/Mahmul Hasan Joy

மறுமுனையில் நிதான ஆட்டத்தினை கடைபிடித்த ஹசன் ஜோய் 102 பந்துகளில் அரைசதம் கடந்தார். மஹ்முதுல் மற்றும் ஷாண்டோ கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 175 ஓட்டங்கள் குவித்துள்ளது.