திருகோணமலையில் பாடசாலை மாணவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
154

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களால் ஆர்பாட்டம் ஒன்று இன்று (13.06.2023) முன்னெடுக்கப்படட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அதிபரை பெற்றுத்தருமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பாடசாலையின் முன்னால் இடம்பெற்றுள்ளது.

கல்வியை சீரலிக்காதே

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கந்தளாய் பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக நீண்ட காலமாக கடமையாற்றி இடமாற்றும் பெற்றுச்சென்ற அதிபரான எச்.எம்.நௌஸாத் என்பவரை மீண்டும் பாடசாலையின் அதிபராக பெற்றுத்தருமாறு கோரியே அப்பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

“வலயக் கல்வி பணிப்பாளரே சுயாதீனமாக இயங்கு, கல்வியை சீரலிக்காதே, எமது அதிபரை பெற்று தா” போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டார்கள்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களினால் கந்தளாய் வலயக் கல்வி அதிகாரிகளிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery