ஆனந்த சங்கரிக்கு அலிசப்ரி புகழாரம்..

0
198

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியை பாராட்டி வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனந்த சங்கரி குறித்து வெளியாகியுள்ள கட்டுரையை பகிர்ந்துகொண்டுள்ள அவர் ஆனந்த சங்கரி குறித்த பதிவினையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ,

தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்ரீதியில் தங்களுடன் உடன்படமறுப்பவர்களையோ தமிழர்கள் மத்தியில் விமர்சனங்களையோ ஏற்றுக்கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகளின் கட்டளைகளிற்கு அடிபணியாத அல்லது அதனை மீறத்துணிந்தவர்கள் இரக்கமற்ற முறையில் கையாளப்பட்டனர்.

விடுதலைபுலிகளை பல்வேறுகாலகட்டங்களில் புண்படுத்திய பல தமிழ் அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதோடு புலிகளும் அவர்களுடன் இணைந்து பயணித்தவர்களும் ஆனந்தசங்கரியை துரோகி என அவதூறாக கண்டித்துள்ளனர்.

ஆனால் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சரியாக புரிந்துகொண்ட சரியாக சிந்திக்கும் அனைவரும் ஆனந்தசங்கரியின் அர்ப்பணிப்பையும் துணிவையும் பாராட்டியுள்ளதாகவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.