வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பெருந்தொகை டொலர்கள்! மத்திய வங்கியின் அறிவிப்பு

0
197

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பப்பட்டுள்ள பணத் தொகை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பணம் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் இவ்வருடம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

மத்திய வங்கியின் தகவல்

இது தொடர்பில்  இலங்கை மத்திய வெளியிட்டுள்ள  தகவலில், 

மே மாதத்தில்  வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 175 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.