சுற்றுலா பயணியை துரத்திய யானை! பகிரப்பட்டு வரும் வீடியோ

0
167

இலங்கையில் யானையொன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை துரத்தியதுடன் வாகனங்களையும் சேதப்படுத்திய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

குறித்த சுற்றுலாப்பயணிகள் பொலன்னறுவையில் உள்ள தேசிய பூங்காவிற்கு பயணித்த போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் முச்சக்கரவண்டியில் பயணித்த போது வீதியோரத்தில் காட்டு யானையை கண்டுள்ளனர்.

அப்போது ஆபத்தை அறியாமல் யானையின் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்தியுள்ள நிலையில் திடீரென ஆத்திரமடைந்த யானை, வாகனங்கள் மீது சரமாரி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதனால் இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளன.

இதன்போது ஒரு முச்சக்கரவண்டிக்குள் இருந்த வெளிநாட்டவர்கள் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.