3 பிள்ளைகளின் தாயை வலுக்கட்டாயமாக கடத்திய மீன் வியாபாரி!

0
163

மூன்று பிள்ளைகளின் தாயை மீன் வியாபாரி ஒருவர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

29 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டு தவறான முறையில் சிறை வைக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கம்புருபிட்டிய மஸ்தகமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயை வலுக்கட்டாயமாக கடத்திய மீன் வியாபாரி; விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல் | Fishmonger Forcibly Abducted A Mother Of Three

அச்சுறுத்தப்பட்ட பெண்

தான் ஓடிப்போனால் கணவன் மற்றும் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் நிர்வாண வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மீன் வியாபாரியால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த வீட்டில் சுமார் 6 மாதங்கள் தங்கியிருந்த பின்னே அப்பெண் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைமுடியை வெட்டி கத்தியை காட்டி மிரட்டி பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதன்படி மாத்தறை நீதவான் நீதிமன்றில் உத்தரவு பெறப்பட்டு சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தாயை வலுக்கட்டாயமாக கடத்திய மீன் வியாபாரி; விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல் | Fishmonger Forcibly Abducted A Mother Of Three

விசாரணையில் தெரியவந்தவை

இதன் போது ​​குறித்த பெண்ணை அச்சுறுத்தப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 5 மீன் வெட்டுக் கத்திகள் மற்றும் குத்துவிளக்கு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி அவரது நிர்வாண காட்சிகள் பதிவாகியிருந்த தொலைபேசி மற்றும் மெமரி கார்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்யும் வீடியோக்களும் தொலைபேசியில் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

36 வயதுடைய சந்தேக நபர் குறித்த மூன்று பிள்ளைகளின் தாயாரின் உறவினர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.