தமிழர்கள் எல்லோருக்கும் சார்ளஸ் அன்ரனியினைத் தெரியும். கூடவே ஆனந்த் என்னும் மாவீரனையும் தெரியும். சார்ள்ஸ் அன்ரனியின் மீதான பற்றுதலே தன் புதல்வனிற்கு சார்ள்ஸ் அன்ரனியின் பெயரைவைக்க தலைவருக்கு காரணமாய் அமைந்தது என்பதும் தெரியும்.
சார்ள்ஸ் அன்ரனியும், ஆனந்த்தும் துரோகி ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிங்களப்படைகளுடன் ஏற்பட்ட மோதலில் வீரகாவியமானது நாம் அறிந்ததே.. தமிழினவிடுதலைப்போராட்டத்தில் அன்று அவர்கள் மிக முக்கியாமான இரு வரலாற்றைப்பதிந்து சென்றார்கள்.
எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பது ஒன்று.. அதனால்தான் தம் சக தோழனிடம் காயம்பட்ட தமை சுடுமாறு பணித்தார்கள். ஒரு சிறிய ஆயுதம்கூட எதிரியிடம் அகப்படக்கூடாது என்பது இரண்டாவது.
அதனால்த்தான் தம் துப்பாக்கிகளையும் எடுத்துக்கொண்டு தப்பிசெல்லுமாறு தன் தோழர்களிடம் கூறினார்கள் சார்ள்ஸ்ம், ஆனந்த்தும்.. ஆயுதங்களை காப்பற்ற தம் உயிரைத்தந்தவர்களின் எண்ணற்ற கதைகள் தமிழினவரலாற்றில் உண்டு. ஆயுத தயாரிப்பின்போது விபத்தில் வீரமரணம் அடைந்த நிறைந்த சம்பவங்களும் தமிழினவரலாற்றில் உண்டு.
ஆயுதங்கள் மீதான காதலே அவர்கள் முப்படை கண்டு தனியரசை நிறுவ வழிசமைத்தது. தம் இன்னுயிர்களை விட தம் மக்களை காக்கும் ஆயதங்களை அவர்கள் மேலாக நேசித்தார்கள்.
கடனாகவும், இலவசமாகவும் தமிழர்களின் படைகளை அழிக்கவென இந்திய/ சர்வதேத்திடம் இருந்து ஆயுதங்களைப்பெற்ற சிங்களத்திற்கு ஆயுதங்களின் அருமை புரியாது.
பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் தம் ஆயுதங்களை கைவிட்டு தம் உயிர்காக்க தப்பி ஓடிய சிங்களப்படையினர், இன்று அவர்களிடம் கைப்பற்றிய ஆயுதங்கள் என சிலவற்றை காட்சிப்படுத்தியிருப்பதை பார்க்க வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கின்றது.