ரணில் அரசின் ஆட்டம் விரைவில் முடியப்போகிறது – திஸ்ஸ அத்தநாயக்க

0
194

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் விரைவில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்கேற்ற வகையிலேயே இந்த அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

எனவே அரசு பெரும்பான்மையை இழந்த பின்னர் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக இந்த வருடம் தேர்தல் வருடமாகவே அமையும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

ரணில் அரசின் ஆட்டம் விரைவில் முடியப்போகின்றது | Ranil Government S Game Is Going To End Soon