இன்று ஐவருக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!

0
237

கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று (08) குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் திகதி அன்று கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்து கல்லினால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் பிறப்பித்தார்.