“எங்களுக்கு எதுவும் சரியாகத் தரல” பிக்பாஸ் வீட்டில் நடந்ததை ஓபனாக பேசிய குயின்சி!

0
382

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இதையெல்லாம் எங்களுக்கு சரியாகவே செய்து கொடுக்கவில்லை என பிக்பாஸ் போட்டியாளர் குயின்சி தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 6

பிரபல தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து சில நாட்கள் கழித்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி வீட்டிற்குள் நுழைந்தார்.

பிக்பாஸ் குயின்சி

அவ்வாறே மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார்கள்.

இறுதியில் அசீம் தான் பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை தன் வசம் ஆக்கி வாகை சூடினார்.

பிக்பாஸ் குயின்சி

பிக்பாஸ் குயின்சி

அந்த 21 போட்டியாளர்களில் ஒரு அழகிய போட்டியாளராக பங்குபற்றியவர் தான் குயின்சி.

இவர் மொடலாக பயணத்தை ஆரம்பித்து பிரபலமாக சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு தான் பிக்பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டார். பிக்பாஸ் போட்டியில் இவர் சிறப்பாக பல டாஸ்க்களில் பங்கு பற்றி வந்தார்.

பிக்பாஸ் குயின்சி

ஆனால் குறைவான வாக்குகளைப் பெற்று வீட்டிலிருந்து வெளியெற்றப்பட்டார். இவர் அண்மையில் பேட்டியில் கலந்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவமொன்றை பகிர்ந்திருந்தார்.

அதில், பிக்பாஸ் வீட்டிற்குள் சாப்பாட்டு விஷயம் எல்லாம் சும்மா என்று தான் சொல்லனும். காலையில் எழுந்ததும் உப்புமா அதே மாதிரி ரைஸ் மற்றும் பருப்பு தான் அனுப்பி வைப்பாங்க.

பிக்பாஸ் குயின்சி

அதை தான் நாங்க சாப்பிட்டு இருப்போம் சாப்பாடு எல்லாம் எங்களுக்கு சரியாகத் தரல என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.