பிரான்சில் முக்கிய பதவியில் இணைந்த யாழ் தமிழ் இளைஞர்!

0
244

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் பிரான்ஸ் பொலிஸ் பிரிவில் முக்கிய பதவியில் இணைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

பிரான்ஸில் தேசிய பொலிஸ் அதிகாரி டிப்ளோமா பட்டம் பெற்ற 175 பேருக்கான சான்றிதழ்களை உள்துறை அமைச்சர் வழங்கியுள்ளார்.

இதன் போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞரான பெண்கலன் இதயசோதி தம்பதியினரின் மகனான பிராண்ட்போன்ட் காலன் பொலிஸ் அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் இவர் பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.