கிளிநொச்சி – அரிவியல் நகர் பகுதியில் புகையிரத கடவையை கடந்த போக்குவரத்து சபை பஸ் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் பயணிகள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் அறிவியல்நகர் ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஸ் திடீரென புகையிரத கடவையை கடந்து பயணித்த நிலையில், பஸ்ஸின் பின் பகுதியில் ரயில் மோதியது.
சம்பவத்தின் போது பஸ்ஸில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனினும், அருகில் நின்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட பீடாதிபதியின் கார் மீது பஸ் மோதியதில் கார் முன்பாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.