கொட்டும் மழையிலும் போலீசார் கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம்!

0
237

கொழும்பு மருதானை, டெக்னிக்கல் சந்திக்கு அருகில்ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டகார்கள் போராடத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொட்டும் மழையிலும் பொலிஸார் கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகம்! | Police Used Tear Gas Canisters Colombo

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று வருவதால் அரசாங்க அச்சகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

அரசாங்க அச்சகத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர். குறித்தப் பகுதியில் பொலிஸ் ரோந்து நடவடிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.