அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட நுண்கலைப் போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் ஜெகநாதன் நிலான் மேற்பிரிவு ஆண்கள் புத்தாக்கநடனம் – தனி போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டி நேற்றைய தினம் (28-12-2022) அனுராதபுரத்தில் நடைபெற்றுள்ளது.
போட்டியில் முதலிடத்தை பெற்ற மாணவனுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.