முன்பள்ளி மாணவனுக்கு வாயில் சூடு வைத்த ஆசிரியர்!

0
300

யாழ்.சங்கானையில் முன்பள்ளி மாணவனுக்கு வாயில் சூடு வைத்த ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வாரம் துணைவி பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றின் மாணவன் தகாத வார்த்தை பேசினான் என கூறி நெருப்புக்குச்சியால் வாயில் சுட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

முன்பள்ளி மாணவனுக்கு வாயில் சூடுவைத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி! | Teacher Warmed The Mouth Pre School Student

இதனையடுத்து முன்பள்ளி ஆசிரியரை கைது செய்த பொலிஸார் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தியபோது ஆசிரியரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.