கடும் குளிரால் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி!

0
406

கடும் குளிரால் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவருக்கு உரித்தான பண்ணையில் இருந்த கால்நடைகள் உயிரிழந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.

10க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி | More Than 10 Cattle Were Killed

இந்த நிலையில் அவற்றை மீட்டு தீ மூட்டி உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும் அயலவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பண்ணையாளருக்கு பல லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இடம் பெற்ற பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றது.