புகையிரதத்தில் மோதுண்டு சிறுமி பலி!

0
313

புகையிரதத்தில் மோதுண்டு சிறுமி பலியான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் கண்டி அஸ்கிரிய புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்தோடு 16 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம்

கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி நேற்று (20) காலை பயணித்த புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த சிறுமி மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.