8 ஆம் திகதி சந்திர கிரகணம்; இலங்கையில் காணமுடியும்!

0
535

எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சந்திரக் கிரகணம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு முழு அளவிலான சந்திர கிரகணமாக தென்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் காணமுடியும்

இதற்கமைய, 8 ஆம் திகதி மாலை 5.48க்கு சந்திரன் உதயமாகும் என்பதுடன், சந்திரக் கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காணமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாலை 6.19க்கு பகுதியளவான சந்திரக் கிரகணம் நிறைவடையும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி மீண்டும் முழு அளவிலான சந்திரக் கிரகணத்தை பார்வையிட முடியும் எனவும் பேராசிரியர் மேலும் கூறியுள்ளார்.

https://www.taatastransport.com/