இன்று காலை பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். வேகமாக பயணித்த தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
பத்து பேர் காயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (02) காலை 7.30 மணியளவில் ஹட்டன் கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி மீபிடிய பிரதேசத்தில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அதேவேளை அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகாமையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.