உலகின் மிக ஆபத்தான செடியை வளர்க்கும் மனிதன்: அதற்கு அவர் சொன்ன காரணம்!

0
5123

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பகுதியை சேர்ந்த நபர், சாதா செடிகளை தமது தோட்டத்தில் வளர்ப்பதில் சுவாரசியம் தரவில்லை எனக் கூறி உலகின் மிக ஆபத்தான செடி ஒன்றை வளர்த்து வருகிறார்.

அவுஸ்திரேலியாவில் காணப்படும் அரியவகையான gympie-gympie என்ற மிகவும் ஆபத்தான செடியையே 49 வயதான Daniel Emlyn என்பவர் வளர்த்து வருகிறார். குறித்த செடியின் விதைகளை இணையமூடாக வாங்கிய அவர், தனியாக ஒரு தொட்டிக்குள் வளர்த்து வருகிறார்.

உலகின் மிக ஆபத்தான செடியை வளர்க்கும் நபர்: அவர் கூறிய அந்த காரணம் | World Most Dangerous Plant Oxford Man Planted

பொதுவாக தோட்டங்களில் இதுபோன்ற செடிகளை வளர்ப்பது ஆபத்து என்பதால், அதன் விதைகளை கவனமுடன் கையாள வேண்டும் என Daniel Emlyn கூறுகிறார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து, சுமார் 60 அவுஸ்திரேலிய டொலர் செலவிட்டு, விதைகளை வாங்கியுள்ளார். குறித்த செடியின் முற்கள் பட்டு காயம் ஏற்பட்டால், அந்த வலி பல வாரங்கள் அல்லது மாதம் வரையில் இருக்கும் எனவும், உயிர் போகும் வலியாக அது இருக்கும் எனவும் Daniel Emlyn கூறுகிறார்.

உலகின் மிக ஆபத்தான செடியை வளர்க்கும் நபர்: அவர் கூறிய அந்த காரணம் | World Most Dangerous Plant Oxford Man Planted

ஆபத்தான gympie-gympie செடியை வளர்க்கும் அவர், அதனை தற்போது ஒரு கூண்டுக்குள் வைத்துள்ளார். சில முறை காயம்பட நேர்ந்தது எனவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக சிக்கல் ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

https://www.taatastransport.com/