இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஹஷான் திலகரத்ன இராஜினாமா செய்துள்ளார்.
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக் கொண்ட நிலையில் அவர் இராஜினாமா செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நவம்பர் 1ஆம் திகதி முதல் ஹஷான் திலகரத்ன, பொறுப்பேற்கவுள்ளார்.