கர்ப்பிணி மனைவியை, காவலில் வைத்துவிட்டு களவு!

0
455

கர்ப்பிணி மனைவியை, காவலில் வைத்துவிட்டு , வீடொன்றில் தங்க நகைகளை திருடிய நபரையும் அவரது மனைவியையும் கைது செய்ததாக பாணந்துறை வடக்கு பொலிசார் தெரிவித்தனர்.

இக்கொள்ளைச் சம்பவம் பாணந்துறை வடக்கு, திக்கல, பராக்கிரம மாவத்தையிலுள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

கர்ப்பிணி மனைவியை காவலுக்கு நிறுத்தி கணவன் செய்த மோசமான செயல்! | Robbery Husband And Wife

கொள்ளையிட்ட  பொருட்கள் மீட்பு

சந்தேக நபர்களான தம்பதியினரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது , 4 லட்ச ரூபா பெறுமதியான தங்கமாலை, பஞ்சாயுதம், மூன்று மோதிரங்கள் மற்றும் பென்டன் ஒன்றும், ஐந்து கிராமுக்கு அதிகமான ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கர்ப்பிணி மனைவியை காவலுக்கு நிறுத்தி கணவன் செய்த மோசமான செயல்! | Robbery Husband And Wife

வீட்டு உரிமையாளரான பெண் தனது மகனை அழைத்துவர பாடசாலை சென்றபோது இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.