திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியில் துவரங்காடு சந்தியில் பாரிய கொள்கலன் ஒன்று விபத்திற்குள்ளானதில் இருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீமெந்து ஏற்றி வந்த பாரிய கொள்கலன்
சீமெந்து ஏற்றி வந்த பாரிய கொள்கலன் ஒன்று வீதியில் நின்றுகொண்டிருந்த மாடுகளுடன் மோதாத வாறு திருப்பி எடுக்க முயற்சித்த வேளை வீதியை விட்டு விலகியுள்ளது.
வீதியை விட்டு விலகிய கொள்கலன் அங்கிருந்த அதி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோதியதன் காரணமாக இவ்விபத்து சம்பவித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் காரணமாக மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்ததால் திருகோணமலையின் பரவலான பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.