நோயாளர்களின் உடைமைகள் திருட்டு!

0
572

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களின் பணம், கையடக்கத் தொலைபேசி மற்றும் தங்க நகைகளை திருடுவோர் தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன.

நோயாளர்களை பார்வையிட செல்லும் போர்வையில் குறித்த குழுவினர் திருட்டில் ஈடுபடுவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு வைத்தியசாலையிலுள்ள சில ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளர்களின் பணம், கையடக்கத் தொலைபேசி மற்றும் தங்க நகைகளை திருடிய சிலர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.