ஒன்ராறியோ தேர்தலில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி!

0
518

ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம்(Yashini Rajakulasingham )அமோக வெற்றி பெற்றார்.

ஸ்காபுறோரூச் பார்க் (Scarborough-Rouge Park) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனு சிறீஸ்கந்தராஜா (Anu Sriskandaraja )அமோக வெற்றி பெற்றார்.

ஸ்காபுறோ மத்தி (Scarborough Center) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நீதன் சாண் (Neethan Chan)அமோக வெற்றி பெற்றார்.

மார்கம் நகரில் வோட் – 7 (WARD 7 COUNCILLOR) கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட யுவனீற்ரா நாதன்(Yuvaneetra Nathan )அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.

வெற்றிபெற்ற நான்கு தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.