நெஞ்சுவலி காரணமாக ஓட்டிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து தவறி வீதியில் விழுந்த குடும்பஸ்த்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் நிக்போட்டா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது முச்சக்கர வண்டியில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பயணித்த போதே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
தூக்கி வீசப்பட்ட சாரதி
பெரகல வெல்லவாய பிரதான வீதியின் பிபிலஹேன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நெஞ்சு வலிப்பதாக கணவர் திடீரென கூறியதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
அப்போது முச்சக்கரவண்டியில் இருந்து திடீரென தவறி விழுந்து உயிரிழந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், சாரதியின்றி முன்னோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மரத்தில் மோதி நின்றது.
முச்சக்கரவண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாரதி வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.