சிறைக்கு சென்ற ஜனனி;பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு!

0
533

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்கள் வெற்றிகரமாக ஓடி முடிந்த நிலையில், அதன் 6 சீசன் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கின்றன.

சக போட்டியாளர்களால் சிறைக்கு சென்ற இலங்கை பெண் ஜனனி... பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு! | Bigg Boss Jail Task Sri Lankan Woman Janany

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.  

சக போட்டியாளர்களால் சிறைக்கு சென்ற இலங்கை பெண் ஜனனி... பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு! | Bigg Boss Jail Task Sri Lankan Woman Janany

பிக் பாஸ் சீசன் 6 யில், போட்டியாளாராக யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் பங்கேற்றுள்ளனர். 

சக போட்டியாளர்களால் சிறைக்கு சென்ற இலங்கை பெண் ஜனனி... பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு! | Bigg Boss Jail Task Sri Lankan Woman Janany

பிக்பாஸில் தற்போது சண்டை , சச்சரவுகள் , கலவரங்கள், களேபரங்கள் அனைத்துமே சூடுபிடித்து இருக்கின்றன.

குறிப்பாக அசீம் – விக்ரமன் மோதல், தனலட்சுமி – அசல் கோளாறு மோதல், ஆயிஷா – அசீம் மோதல் என பலவிதமான மோதல்கள் உருவெடுக்கின்றன.

சக போட்டியாளர்களால் சிறைக்கு சென்ற இலங்கை பெண் ஜனனி... பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு! | Bigg Boss Jail Task Sri Lankan Woman Janany

பிக்பாஸில் இன்னும் ஒரு முக்கிய அம்சமாக போட்டியாளர்கள் சிறைக்கு செல்லக்கூடிய டாஸ்க் இருக்கிறது.

இதில் இந்த 6 வது சீசனில் ராமசாமி மற்றும் ஜனனி இருவரும் சிறைக்கு முதலில் அனுப்பப் படுகின்றனர். இவர்களுக்கான சிறை ஆடையை ஜிபி முத்து கொண்டு வந்து கொடுக்கிறார்.

பின்னர் சிறைக்கு செல்லும் ராமசாமி மற்றும் ஜனனி இருவருமே அமர்ந்து கொண்டு தங்களுடைய நிறை குறைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.   

அதில் ஜனனி, “மற்றவர்களைவிட நாம் என்ன செய்யாமல் விட்டு விட்டோம் ? நாம் ஏன் சிறைக்கு வந்திருக்கிறோம் ?” என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராம், “அதுதான் எனக்கும் சந்தேகம் .. யாரோ இருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சக போட்டியாளர்களால் சிறைக்கு சென்ற இலங்கை பெண் ஜனனி... பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு! | Bigg Boss Jail Task Sri Lankan Woman Janany

நாம் ஏன் இங்கே உட்கார்ந்து கொண்டு கடிவாங்கிக் கொண்டே இருக்க வேண்டும்?” என்று கேட்டுள்ளார். இது தொடர்பில்  நாளைய நிகழ்ச்சிதான் தான் காணமுடியும்.