இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வெடி மருந்து!

0
585

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட 400 ஜெலட்டின் வெடிகுண்டுகளை கடற்படையினர் நேற்று மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் கக்கடைதீவுற்கு சென்ற கடற்படையினர் அங்கு மறைத்துவைகக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை மீட்டனர்.

இதேவேளை கக்கடை தீவில் மனிதர்கள் வாழுவதில்லை எனவும் அங்கு இந்தியாவில் இருந்து கடல்வழியாக இந்த வெடி பொருட்களை கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.