ஐந்து பெண்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது!

0
576

தீபாவளி பொருள் கொள்வனவுக்காக ஹட்டன் நகருக்கு வருகைத் தருபவர்களின் பணம், நகைகள், உள்ளிட்டவைகளை கொள்ளையடிப்பதற்காக சந்தேகநபர்கள் ஐவரும் ஹட்டன் நகருக்கு வருகைத் தந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பத்திக் குச்சிகள் விற்பனை

கைதானவர்கள் 18- 30 வயதுக்குட்பட்ட குறித்த ஐந்து பெண்களும் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

அத்துடன், இவர்கள் பத்திக் குச்சிகள் விற்பனை செய்யும் போர்வையில் ஹட்டன் நகருக்கு வருகைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பெண்கள் அதிரடியாக கைது! | Five Women Arrested In Action

இந்நிலையில் கைதான சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.