2022 ஆம் ஆண்டு உலகளாவிய பட்டினி சுட்டெண்ணில் 64 ஆவது இடத்துக்கு இலங்கை முன்னேறியுள்ளது.
இந்த ஆண்டு, 121 நாடுகள் பட்டினி சுட்டெண்ணில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சுட்டெண்ணின் படி இலங்கை 13.6 புள்ளிகளை பெற்றுள்ளது கடந்த ஆண்டில் பட்டினி சுட்டெண்ணில் 116 நாடுகளில் இலங்கை 65வது இடத்தில் இருந்தது.
நாடுகளில் உணவுப் பற்றாக்குறை, சரியான ஊட்டச்சத்து இல்லாமை, குழந்தை வளர்ச்சி, வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு விகிதம் போன்றன இதன் போது கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
இந்த ஆண்டு பட்டினி சுட்டெண் படி, தெற்காசிய நாடுகளில் இந்தியா 101 ஆவது இடத்திலிருந்து 107 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் 99 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 84 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.