இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த இலங்கை சபாநாயகர்!

0
532

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே (Gopal Baglay) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை (Mahinda Yapa Abeywardena) சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் (07-09-2022) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக இலங்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்திருந்ததுடன் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.