சீனாவில் இருந்து உரத்தை இறக்குமதி செய்து நாட்டிற்கு 69 இலட்சம் டொலரை இழந்தமைக்கு முன்னாள் அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவே (Shasheendra Rajapaksa) காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என நாடாளுமன்றத்தில் அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டிற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் ஆனால் ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அச்சம் காரணமாக அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.