வடக்கு, கிழக்கில் இன்று ஆர்ப்பாட்டம்!

0
433

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களை கடந்துள்ள நிலையில் இன்று வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்படவுள்ளது.