கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கான மூல காரணத்தை கண்டறிய ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் இங்கு வரவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணிலின் தீர்மானத்தின் அடிப்படையிலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.