நிமல் மீதான குற்றச்சாடை விசாரிக்க ஜனதிபதியினால் குழு நியமனம்

0
591

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்க மூவரடங்கிய விசாரணை குழுவை நியமித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் ஜப்பானின் தயசே நிறுவனத்திடம் கையூட்டல் கோரியதாக சமூக வலைத்தளங்கள் உட்பட ஆச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு நாடாளுமன்றத்தில் குறிப்பிடப்பட்ட விடயத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மீது எதிர் கட்சி தலைவர் குற்றம் சுமத்தியதுடன் அது குறித்து விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தார்.

இதற்கமைய நியமிக்கப்பட்ட குழுவிடம் இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையை சமர் பிக்குமாறு கோரியுள்ளார்.